Tamilnadu
சொந்த காரிலேயே கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தி.மு.க தொண்டர்: பொதுமக்கள் நெகிழ்ச்சி!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை தி.மு.கவினர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மதுரவாயல் மேட்டுக்குப்பம் 147வது வார்டை சேர்ந்த திமு.க தொண்டர் எம்.ஆர்.சதீஷ் , அந்த வட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
முன்னதாக மே 15ம் தேதி சதீஷ் தனது ஃபேஸ்புக் பதிவில், 147வது வார்டு பகுதியில் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என தனது தொலைபேசி எண்ணுடன் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் சதீஷ் தனது சொந்த காரிலேயே உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கொரானா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.
இது வரை 40 பேர் வரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சதீஷ். மேலும் சதீஷின் இந்தச்செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !