Tamilnadu
சொந்த காரிலேயே கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தி.மு.க தொண்டர்: பொதுமக்கள் நெகிழ்ச்சி!
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை தி.மு.கவினர் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மதுரவாயல் மேட்டுக்குப்பம் 147வது வார்டை சேர்ந்த திமு.க தொண்டர் எம்.ஆர்.சதீஷ் , அந்த வட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, தனது சொந்த வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
முன்னதாக மே 15ம் தேதி சதீஷ் தனது ஃபேஸ்புக் பதிவில், 147வது வார்டு பகுதியில் யாராவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என தனது தொலைபேசி எண்ணுடன் பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் சதீஷ் தனது சொந்த காரிலேயே உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கொரானா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.
இது வரை 40 பேர் வரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் சேர்த்துள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் சதீஷ். மேலும் சதீஷின் இந்தச்செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!