Tamilnadu
“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும்” : அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறத. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரசு அதிகாரிகள், மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்கும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு முதல்வரின் உத்தரவின் பேரில் இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தற்போது தேவையான அளவு ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளது.
மேலும் வரும் காலத்தில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டாயம் சிகிச்சை அளிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!