Tamilnadu
“ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய DYFI அமைப்பினர்” : குவியும் பாராட்டு!
தமிழகத்தில் கொரனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர்
இதனால் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பிற நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த குறையை தீர்ப்பதற்காக சென்னை ஆர்.கே.நகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ, கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ, ரத்த தானம் செய்வதற்கும் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக ஆட்டோ சேவை தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைக்கு 8508698507, 9940568563, 95001364994, என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 24மணி நேரமும் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஆட்டோ சேவையை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மக்களின் துயரங்களை அறித்து இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!