Tamilnadu
“ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிய DYFI அமைப்பினர்” : குவியும் பாராட்டு!
தமிழகத்தில் கொரனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் தவிர்த்து வருகின்றனர்
இதனால் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட பிற நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த குறையை தீர்ப்பதற்காக சென்னை ஆர்.கே.நகர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ, கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ, ரத்த தானம் செய்வதற்கும் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக ஆட்டோ சேவை தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைக்கு 8508698507, 9940568563, 95001364994, என்ற எண்ணை தொடர்பு கொண்டால் 24மணி நேரமும் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த ஆட்டோ சேவையை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மக்களின் துயரங்களை அறித்து இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை துவக்கியுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Also Read
-
”3 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகள்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
200-க்கு 212 : குஜராத் பள்ளியில் மாணவி பெற்ற மதிப்பெண்ணால் ஷாக் - கேள்விக்குறியாகும் கல்வியின் தரம்!
-
3 Yrs of DMK Govt: 3 ஆண்டுகளில் உலகப் புகழ் பாடும் சாதனைகள் - சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு வாழ்த்து!
-
NEET 2024 தேர்வு மோசடி விவகாரம் : 11 மாணவர்கள் உள்பட 24 பேர் அதிரடி கைது - பின்னணி என்ன?