Tamilnadu
சட்டம் ஒழுங்கை காக்க Hello Police திட்டம் அறிமுகம் - கைபேசி எண் வெளியிட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள தனமாக மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் “ஹலோ போலீஸ் ” என்ற ஒரு புதிய கைப்பேசி எண் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது,
பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்த ஒரு குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாக, 7200102104 என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது S M S / Whats app மூலமாகவும் தொடர்புகொண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!
-
“பொங்கல் விழாவை கலை மற்றும் குறள் விழாக் காலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர்...” - முரசொலி புகழாரம்!
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!