Tamilnadu
சட்டம் ஒழுங்கை காக்க Hello Police திட்டம் அறிமுகம் - கைபேசி எண் வெளியிட்ட செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள தனமாக மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்கலாம் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் “ஹலோ போலீஸ் ” என்ற ஒரு புதிய கைப்பேசி எண் பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது,
பொதுமக்கள் தங்கள் பகுதியில் எந்த ஒரு குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் உடனடியாக, 7200102104 என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது S M S / Whats app மூலமாகவும் தொடர்புகொண்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
புதுடெல்லியில் நடைபெறும் தமிழ்நாடு நாள்... 44-வது பொருட்காட்சி.. தொடங்கி வைத்தார் அமைச்சர் சாமிநாதன்!
-
சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நீட்டிப்பு... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேண்டுகோள்!
-
இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு.. ஆரஞ்சு அலர்ட் முதல் கனமழை வரை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
-
சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!
-
”பாஜகவும், அடிமைக் கூட்டமும் செய்திடும் SIR சூழ்ச்சியை முறியடிப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!