Tamilnadu
கருப்பு பூஞ்சை நோய்.. தமிழகத்தை தாக்கினால் எதிர்கொள்ள அரசு தயார் என அமைச்சர் சேகர்பாபு தகவல்!
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தொற்று பாதித்த சிலர் கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், மத்தியப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, பீகார் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த நோய் பாதித்தவர்கள் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த நோய் கொரோனா தொற்றாலர்களை தாக்குவதற்குக் காரணம் அதிகமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள்வதால் அவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நோய் தாக்கியுள்ளதால், தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!