Tamilnadu
“கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” : அமைச்சர் நாசர் எச்சரிக்கை!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் விலை குறைக்கப்பட்ட ஆவின் பால் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “பால் விலையைக் குறைத்து தமிழக மக்களின் வயிற்றில் முதலமைச்சர் பால்வார்த்திருக்கிறார். அரசு நிர்ணயித்திருக்கும் விலையை விட கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் ஆவின் பால் விற்பனையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் சேவையே எங்களுக்கு முக்கியம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?