Tamilnadu
‘டவ் தே’ புயல்: பேரிடர் மீட்பு படையை உஷார் படுத்துக - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!
அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள "டவ் தே " புயல், வரும் 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18- ந் தேதி வரை கன மழை முதல் மிக கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளத் அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், மழை அதிகம் பெய்யக்கூடிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான அளவு அருவை இயந்திரங்கள் கையிருப்பு வைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!