Tamilnadu
‘டவ் தே’ புயல்: பேரிடர் மீட்பு படையை உஷார் படுத்துக - அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!
அரபிக்கடலில் நிலைக்கொண்டுள்ள "டவ் தே " புயல், வரும் 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18- ந் தேதி வரை கன மழை முதல் மிக கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளத் அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில், மழை அதிகம் பெய்யக்கூடிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு பொருட்களை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவையான அளவு அருவை இயந்திரங்கள் கையிருப்பு வைக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!