Tamilnadu
“90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கவேண்டும்” : உலகளாவிய டெண்டர் கோரியது தமிழக அரசு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரத்தில், 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் போதிய அளவில் தடுப்பூசி வழங்கவேண்டிய மத்திய அரசு மாநில அரசுகள் தமது தேவைக்கேற்ப வெளியில் கொள்முதல் செய்துக்கொள்ளலாம் என அறிவித்தது.
இதனால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு பல இடங்களில் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 12ம் தேதி நடைபெற்றக் கூட்டத்தில், தடுப்பூசி தேவைக்காக கொள்முதல் செய்யவும் தமிழக அரசு முடிவெடுத்தது.
ஆனால், அனைவருக்கும் தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தலாம் என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது.
அதன்படி, இன்று தமிழக அரசு தடுப்பூசி தேவைக்காக தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மூலம் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி ஒன்றை கோரியுள்ளது.அதில், முதற்கட்டமாக 5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும் 90 நாட்களில் இந்த தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !