Tamilnadu

தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா பலி எண்ணிக்கை... சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 23,310 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,72,602 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,48,695 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,29,79,687 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 6,291 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,64,081 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 2,029 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,755 பேருக்கும் திருவள்ளூரில் 1,385 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,29,512 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,28,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 167 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 73 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 94 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 14,779 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: “கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக உதவவேண்டும்” - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!