Tamilnadu
தலைநகரை முழுமையாக கைப்பற்றும் தி.மு.க: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 17,476 வாக்குகள் முன்னிலை! #DMK
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கானன வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி 142 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.கவில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
அந்த வகையில், சென்னையில் உள்ள 16 தொகுதியிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகின்றனர். இதன் மூலம் தலைநகரை தி.மு.க முழுமையாகக் கைப்பற்றவிருக்கிறது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எட்டு சுற்றுகளின் முடிவில் அ.தி.மு.க வேட்பாளரை விட 17,476 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 16,819 வாக்குகள் வித்தியாசத்தில் முனனிலையில் உள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றியழகன் 5067 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் தியாகராய நகர் தி.மு.க வேட்பாளர் ஜெ.கருணாநிதி 20198 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவருகிறார்.
எழுப்பூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் 9450 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் வகித்துவருகிறார். மயிலாப்பூர் தி.மு.க வேட்பாளர் த.வேலு 13960 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எபினேசர் 12351 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல், ராயபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, அமைச்சர் ஜெயக்குமாரை விட 4177 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன் 13279 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!