Tamilnadu
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உளுந்தூர்பேட்டையை கைப்பற்றிய தி.மு.க... தொண்டர்கள் உற்சாகம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி காலையில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வேட்பாளர்கள் வெற்றி முடிவுகளும் வெளிவந்தபடியே இருக்கிறது.
தி.மு.க கூட்டணி 166 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. அ.தி.மு.க கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் இருந்தபோதும், கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தி.மு.க வேட்பாளர் ஏ.ஜே.மணிகண்ணன் முன்னிலை வகித்து வந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார்.
30 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் மணிகண்ணன் 1,14,344 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தி.மு.க 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் உளுந்தூர்பேட்டை தொகுதியை கைப்பற்றியுள்ளது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!