Tamilnadu
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உளுந்தூர்பேட்டையை கைப்பற்றிய தி.மு.க... தொண்டர்கள் உற்சாகம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி காலையில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. வேட்பாளர்கள் வெற்றி முடிவுகளும் வெளிவந்தபடியே இருக்கிறது.
தி.மு.க கூட்டணி 166 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க தனிபெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. அ.தி.மு.க கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் இருந்தபோதும், கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தி.மு.க வேட்பாளர் ஏ.ஜே.மணிகண்ணன் முன்னிலை வகித்து வந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தார்.
30 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் மணிகண்ணன் 1,14,344 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தி.மு.க 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் உளுந்தூர்பேட்டை தொகுதியை கைப்பற்றியுள்ளது.
Also Read
- 
	    
	      
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
 - 
	    
	      
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
 - 
	    
	      
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!
 - 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!