Tamilnadu
“அபராதம் விதித்தால் கொரோனா குறைந்துவிடுமா?” : போலிஸாரின் வசூல் வேட்டையால் கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையம் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதுபோன்று மாவட்டங்களிலும் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல்நிலைய போலிஸார் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வேட்டையைத் துவங்கியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காவல்நிலையம் அருகே சாலையில் தடுப்பை அமைத்து அந்த வழியாக வரும் கார்களை நிறுத்தி, அதில் முகக்கவசம் அணியாதவர்களிடம் தங்கள் இஷ்டம்போல் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதாவது, காரில் 2 பேர் இருந்தால் 200 ரூபாய் என்றும் 5 பேர் இருந்தால் 5 ஆயிரம் ரூபாய் என்று போலிஸார் வசூல் வேட்டையை நடத்துவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் சென்னையிலும் போலிஸார் தங்களின் வசூல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.
முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், அபராத கட்டணம் வசூலித்தால் மட்டும் கொரோனா தொற்று குறைந்துவிடுமா என்றும் அபராதம் வசூலிக்கும் போலிஸார் முகக்கவசம் கூட கொடுப்பதில்லை என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !