Tamilnadu
"ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற 10 ரூபாய் டாக்டர் மறைவு” - சோகத்தில் மூழ்கிய வடசென்னை!
சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருத்துவர் கோபால், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் கோபால். இவர் கடந்த பல ஆண்டுகளாக வெறும் பத்து ரூபாய்க்கு அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.
மருத்துவர் கோபால், சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
10 ரூபாய்க்கு சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் அப்பகுதி மக்கள் இவர் மீது மிகுந்த அன்பைக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த மருத்துவர் கோபால் இன்று காலமனார்.
10 ரூபாய் டாக்டர் கோபால் உயிரிழந்தது வடசென்னை பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி மக்கள், டாக்டர் கோபால் மறைவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
10 ரூபாய் டாக்டர் என்றழைக்கப்படும் சமூகநீதி மருத்துவர் கோபால் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வண்ணாரப்பேட்டையைச் சார்ந்த சமூக சேவை மருத்துவர் கோபால் அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எவருக்கும் எளிதில் கிடைத்திடாத '10 ரூபாய் டாக்டர்' என்ற அடைமொழியை மருத்துவத்தை சேவையாகச் செய்து பெற்றவர்! பல்லாண்டுகள் பேசப்படும் அவரது புகழ்! ஆழ்ந்த அஞ்சலி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !