Tamilnadu
புதுச்சேரியில் பணப்பட்டுவாடா படுஜோர் - மோடி படத்துடன் தங்கக் காசு, பணப்பட்டுவாடா செய்த பா.ஜ.க!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று இரவு 7 மணியோடு நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க பணப்பட்டுவாடா செய்வதைப் போலவே, புதுச்சேரியிலும் இவர்கள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் பா.ஜ.கவினர் தங்கக் காசு மற்றும் பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டவுடன் பா.ஜ.கவினர் கையிலிருந்த பையைப் போட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
பின்னர், பா.ஜ.கவினர் வீசி சென்ற பையில் 149 தங்கக் காசுகளும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பணம் இருந்தது. இதையடுத்து திருநள்ளாறு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!