Tamilnadu
புதுச்சேரியில் பணப்பட்டுவாடா படுஜோர் - மோடி படத்துடன் தங்கக் காசு, பணப்பட்டுவாடா செய்த பா.ஜ.க!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பரப்புரைகள் இன்று இரவு 7 மணியோடு நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க பணப்பட்டுவாடா செய்வதைப் போலவே, புதுச்சேரியிலும் இவர்கள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் பா.ஜ.கவினர் தங்கக் காசு மற்றும் பணப்பட்டுவாடா செய்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகளைக் கண்டவுடன் பா.ஜ.கவினர் கையிலிருந்த பையைப் போட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.
பின்னர், பா.ஜ.கவினர் வீசி சென்ற பையில் 149 தங்கக் காசுகளும் ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பணம் இருந்தது. இதையடுத்து திருநள்ளாறு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Also Read
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!