Tamilnadu
தினமும் கிண்டல் செய்ததால் ஆத்திரம்... பள்ளி மாணவன் சுத்தியலால் அடித்துக்கொலை... தேனி அருகே அதிர்ச்சி!
தேனி மாவட்டம், கண்டமனூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனசேகரன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனசேகரன் தன்னுடன் படிக்கும் சக மாணவரை அடிக்கடி கிண்டல் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், தனசேகரன் நேற்று முன்தினம் பள்ளியின் மதிய உணவு இடைவெளியின்போது, அந்த மாணவனைக் கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிண்டலுக்குள்ளான மாணவன், தன் கையில் வைத்திருந்த சுத்தியலால், திடீரென தனசேகரனின் தலையில் அடித்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் தனசேகரன் கீழே விழுந்தார். உடனே ஆசிரியர்கள் சிலர் தனசேகரனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தனசேகரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தனசேகரனை சுத்தியலால் அடித்த மாணவனைக் கைது செய்தனர். பின்னர் தனசேகரின் உறவினர்கள் கண்டமனூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது, உயிரிழந்த தனசேகரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!