Tamilnadu
’பழனி எங்களுக்குத்தான்..’ : அ.தி.மு.க கூட்டணியில் இருந்து கொண்டே எடப்பாடிக்கு ’ஷாக்’ கொடுக்கும் பா.ஜ.க
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் இழுபறியுடன் தொடர்ந்து வருகின்றன.
இதுவரை பா.ம.கவுக்கு மட்டும் 23 தொகுதிகளை அ.தி.மு.க ஒதுக்கியுள்ளது. மேலும் பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.க உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், தொகுதிப் பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
அ.தி.மு.க தலைமையுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும், பா.ஜ.கவுக்கு எத்தனை இடம், எந்தெந்த தொகுதிகள் என ஒதுக்க முடியாமல் அ.தி.மு.க திணறிவருகிறது.
இந்நிலையில், அ.தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பழநி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களில் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள், சுவரில் தாமரை சின்னத்தை வரைந்து, பழனியில் நாங்கள்தான் போட்டியிடப் போகிறோம் என சூசகமாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் பூத்கமிட்டிகள் அமைத்து தேர்தல் பணியில் பா.ஜ.கவினர் ஈடுபட்டுள்ளனர்.
"பழநி தொகுதி எங்களுக்குக் கட்டாயம் ஒதுக்கப்படும் என்பதால்தான் நாங்கள் தேர்தல் பணிகளைத் துவங்கியிருக்கிறோம்" என பா.ஜ.கவினர் கூறிவருகின்றனர். பா.ஜ.கவினரின் இந்தச் செயல் அ.தி.மு.க நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-வை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பா.ஜ.க, தொகுதிப் பங்கீடு விவகாரத்திலும் வல்லாதிக்கம் செலுத்துவதாக அ.தி.மு.க-வினர் குமுறுகின்றனர்.
Also Read
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !