Tamilnadu
முறையற்ற உறவால் சிதைந்த குடும்பம்: வறுமையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை.. சேலத்தில் சோகம்
சேலம் மாவட்டம் சங்ககிரி புது வளவு பகுதியைச் சேர்ந்த பிரியங்கா சரத்குமார் தம்பதியினருக்கு கிருத்திக்குமார் என்ற 6 வயது மகனும் மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரியங்காவிற்கு பார்த்திபன் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதால் ஆத்திரமடைந்த அவரது கணவர் சரத்குமார் பிரியங்காவின் தந்தை தங்கவேல் அவளது அண்ணன் நந்தகுமார் ஆகிய 3 பேரும் கள்ளக்காதலன் பார்த்திபனை சரமாரியாக குத்தி கொலை செய்த வழக்கில் மூன்று பேரையும் சங்ககிரி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியங்காவின் தந்தை தங்கவேலுவுக்கு மட்டும் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. இந்நிலையில், குழந்தைகளை கவனிக்க முடியாமல் வறுமையின் காரணமாக இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு பிரியங்காவும் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இத்தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது பிரியங்காவின் மகன் கிருத்திக்குமார் மட்டும் உயிருடன் இருந்ததை அறிந்து அவசர ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் பிரியங்காவின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வறுமைக்கு தள்ளப்பட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!