Tamilnadu
எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் கோழி, ஆடுகளை விநியோகிக்கும் அ.தி.மு.கவினர் : நீலகிரியில் அட்டூழியம்!
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே அ.தி.மு.கவின் நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் வேலுமணி வீடுவீடாக 500 ரூபாய் பணம், வேட்டி சேலை, ஒரு தட்டு போன்றவற்றை வழங்கினார். இதைத்தொடர்ந்து 4 வழக்குகள் அ.தி.மு.கவினர் மீது பதிவு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று குன்னூரை சுற்றி உள்ள இருளர், பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு வீடு வீடாகச் சென்று ஒரு வீட்டிற்கு 10 நாட்டு கோழிக்குஞ்சுகள், ஒரு இலவச ஆடு வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அப்பகுதியில் சிலர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வந்த 4,500 கோழிக் குஞ்சுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கோழிக்குஞ்சுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றனர். தோல்வி பயம் காரணமாக அமைச்சர் வேலுமணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !