Tamilnadu
எஸ்.பி.வேலுமணி உத்தரவின் பேரில் கோழி, ஆடுகளை விநியோகிக்கும் அ.தி.மு.கவினர் : நீலகிரியில் அட்டூழியம்!
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளே அ.தி.மு.கவின் நீலகிரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் வேலுமணி வீடுவீடாக 500 ரூபாய் பணம், வேட்டி சேலை, ஒரு தட்டு போன்றவற்றை வழங்கினார். இதைத்தொடர்ந்து 4 வழக்குகள் அ.தி.மு.கவினர் மீது பதிவு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று குன்னூரை சுற்றி உள்ள இருளர், பழங்குடியினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் கிராம பகுதிகளில் அமைச்சர் வேலுமணி உத்தரவின்பேரில் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு வீடு வீடாகச் சென்று ஒரு வீட்டிற்கு 10 நாட்டு கோழிக்குஞ்சுகள், ஒரு இலவச ஆடு வழங்குவதற்கான டோக்கன்களை வழங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அப்பகுதியில் சிலர் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வந்த 4,500 கோழிக் குஞ்சுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கோழிக்குஞ்சுகளை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு கொண்டு சென்றனர். தோல்வி பயம் காரணமாக அமைச்சர் வேலுமணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!
-
“பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை” : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய்யை பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்க : வைகோ வலியுறுத்தல்!