Tamilnadu
கோயிலில் மோடி காலண்டர்களை விநியோகித்த பா.ஜ.கவினர்: போட்டி போட்டு தேர்தல் விதிகளை மீறும் அ.தி.மு.க-பா.ஜ.க!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கடந்த 10 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை காண அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வருவதை அறிந்த பா.ஜ.கவினர், கட்சி சின்னமான தாமரை, பிரதமர் மோடி படங்கள் அச்சிட்ட காலண்டர்களை நேற்று இலவசமாக மக்களுக்கு வழங்கினர்.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கட்சி தலைவர்கள் படங்கள் உள்ள காலண்டர்களை விநியோகிக்கக்கூடாது எனக் கூறி, 900 காலண்டர்களை பறிமுதல் செய்தனர். காலண்டர்களை விநியோகம் செய்த பா.ஜ.க நகர துணைத் தலைவர் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ராமநாதபுரம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உத்தர பிரதேசம், நாகாலாந்தில் இருந்து வந்த இரண்டு கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இந்த லாரிகளில் மறைந்த ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் ஒட்டப்பட்ட புத்தகப்பைகள் இருந்தன. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் புத்தகப்பைகளை பறிமுதல் செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!
-
காவிரி விவகாரம்.. முதலமைச்சர் உறக்கம் கலைத்து திருவாய் மலர்வது எப்போது?- முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி!
-
“விவசாயிகளுக்காக தஞ்சையில் திரண்ட கழகம்.. கோரிக்கை நிறைவேறாவிட்டால்” : மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
‘இதுவே தி.மு.க. ஆட்சியில் நடந்திருந்தால்...?’ : தவெக-வின் அட்டூழியத்தை அடுக்கி கேள்வி எழுப்பிய முரசொலி!
-
“முதல்வர் விஜய்க்கு ஏன் ஈகோ.. அமைச்சர் நிர்மல்குமார் திமுக-வைப் பற்றி பேசினால்”: எச்சரித்த பரந்தாமன்!