Tamilnadu
தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க அரசு - விபத்துக்குள்ளான அரசு பேருந்துகள்!
தமிழகம் முழுவதும் மூன்றவாது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தித் தீர்வு காண வேண்டும்.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருவதால், தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அ.தி.மு.க அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால், ஆங்காங்கே சில இடங்களில் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
அந்தவகையில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, செங்கல்பட்டு அருகே விபத்தில் சிக்கியது. இதேபோல், திருப்பூரில் இருந்து செங்கல்பட்டு வந்த அரசு பேருந்து ஒன்றும் சாலையில் தடுப்புச் சுவர் மீத மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதேபோல் மூன்றாவது நாளான இன்று மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பேருந்து நிலையங்களில் முறையாக மலை பிரதேசங்களில் பேருந்து போன்ற பெரிய வாகனங்களை வாகனங்களை இயக்க முன் அனுபவம் இல்லாத பயிற்சி ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உதகை மண்டல அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச மண்டல செயலாளர் நெடுஞ்சாலையின் குற்றம்சாட்டியுள்ளார். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் , பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் தமிழக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசுபயிற்சி இல்லாத ஓட்டுனர்கள் மூலம்பயணிகளின் உயிர்களில் விளையாடுவதாக குற்றம்சாட்டினார்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!