Tamilnadu
“தொண்டாமுத்தூர் தொகுதியின் 2 பூத்களை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளது ஏன்?” - ஆர்.எஸ்.பாரதி புகார்!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தலைமையிலான குழு, இன்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க சார்பில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தி.மு.க சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி எம்.பி., “தி.மு.க சார்பில் தேர்தல் ஆணையரிடம் ஏற்கனவே 6 மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை அதற்கு பதில் வரவில்லை. ஆனால் அ.தி.மு.கவின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதில் வருகிறது.
இது ஒரு தலைபட்சமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினோம். அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக தி.மு.கவின் மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு உத்தரவிட்டார்கள்.
மாதவரம் தொகுதியில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு எந்த வித பாதுகாப்பும் இன்றி உள்ளதால் கதவுகள் உடைந்து இயந்திரங்கள் உடைக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினோம். நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் இன்னும் முழுமையாக தயார் செய்யப்படவில்லை. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில், 522 காவலர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குகளை முறைகேடாக பயன்படுத்தக் கூடும் என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
அரசுப் பணத்தில் தொடர்ந்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும், சட்டப்பிரிவினருடன் இணைந்து தி.மு.க சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். எந்த நேரத்தில் தேர்தல் வைத்தாலும் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது.
அமைச்சர் வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியில், இரண்டு பூத்துகளை சிங்காநல்லூர் பகுதியில் வைத்துள்ளனர். அதில் உள்நோக்கம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!