Tamilnadu
சென்னையில் பிரியாணி, பிஸ்கட் பாக்கெட்களில் புழு : மெத்தனத்தில் உணவு பாதுகாப்புத்துறை - பதட்டத்தில் மக்கள்
சென்னை தாம்பரம் ராஜாஜி சாலையில் பிரபல பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ராகி பிஸ்கட் வாங்கியுள்ளார்.
இதையடுத்து பிஸ்க்கட் பாக்கிட்டை பிரித்து பார்த்தபோது பிஸ்கட் முழுவதும் புழுக்கள் இருந்துள்ளன. இதனைக் கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே பேக்கரிக்கு வந்த மேலும் ஒருவர் ராகி பிஸ்கட்டை வாங்கி பார்த்தபோது அதிலும் புழுக்கள் இருந்துள்ளன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அந்த பேக்கரியில் அதிரடி சோதனை மேற்கொண்டார். சோதனையில் ராகி பிஸ்கட் பாக்கெட்டில் புழு மற்றும் பூச்சி இருப்பதை உறுதி செய்தார்.
மேலும் இந்த பிஸ்கட் காலாவதியானது என்றும் தெரியவந்தது. இதனையடுத்து ராகி பிஸ்கட்களை கைப்பற்றி கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரத்தில் பிரியாணி கடையில் புழு இருப்பதை அறியாமல் சாப்பிட்ட ஒருவர் பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!