Tamilnadu
“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன் சாடல்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் பகுதி செயலாளர் முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் குடிதண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை இப்போது உள்ள அதிமுக அரசு பணிகளை முறையாக செய்யாததால் இப்போதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி இருந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் குழாயில் வந்து கொண்டிருக்கும். விரைவில் தி.மு.க ஆட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும். அப்போது அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கும்படி அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படும்.
மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடி தண்ணீருக்கு இந்த அரசு மீட்டர் பொருத்தி பொதுமக்களிடையே வரி வசூலிக்க பார்க்கிறது. குடி தண்ணீருக்கு வரி போடுகின்ற ஒரு கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சி வந்தவுடன் பொருத்தப்பட்ட அனைத்து குடிதண்ணீர் மீட்டர்களையும் பிடிங்கி எறியப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !
-
”பொய் மட்டுமே பேசும் ஒரே தலைவர்” : பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி!
-
”தேர்தல் ஆணையம் மீதே சந்தேகங்கள் அதிகம் இருக்கு” : முரசொலி தலையங்கம் சொல்வது என்ன?
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !