Tamilnadu
“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன் சாடல்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் பகுதி செயலாளர் முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் குடிதண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை இப்போது உள்ள அதிமுக அரசு பணிகளை முறையாக செய்யாததால் இப்போதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி இருந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் குழாயில் வந்து கொண்டிருக்கும். விரைவில் தி.மு.க ஆட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும். அப்போது அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கும்படி அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படும்.
மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடி தண்ணீருக்கு இந்த அரசு மீட்டர் பொருத்தி பொதுமக்களிடையே வரி வசூலிக்க பார்க்கிறது. குடி தண்ணீருக்கு வரி போடுகின்ற ஒரு கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சி வந்தவுடன் பொருத்தப்பட்ட அனைத்து குடிதண்ணீர் மீட்டர்களையும் பிடிங்கி எறியப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !