Tamilnadu
“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன் சாடல்!
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மக்கள் கிராம சபை கூட்டம் பகுதி செயலாளர் முருகப்பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “தி.மு.க ஆட்சியில் பொது மக்களின் குடிதண்ணீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை இப்போது உள்ள அதிமுக அரசு பணிகளை முறையாக செய்யாததால் இப்போதும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி இருந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் குழாயில் வந்து கொண்டிருக்கும். விரைவில் தி.மு.க ஆட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும். அப்போது அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கும்படி அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்படும்.
மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் குடி தண்ணீருக்கு இந்த அரசு மீட்டர் பொருத்தி பொதுமக்களிடையே வரி வசூலிக்க பார்க்கிறது. குடி தண்ணீருக்கு வரி போடுகின்ற ஒரு கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு. தி.மு.க ஆட்சி வந்தவுடன் பொருத்தப்பட்ட அனைத்து குடிதண்ணீர் மீட்டர்களையும் பிடிங்கி எறியப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!