Tamilnadu
“பொங்கல் பரிசுத்தொகையை நாங்கள்தான் கொடுப்போம்” : ரேஷன் கடை ஊழியர்களிடம் அத்துமீறும் ஆளுங்கட்சியினர்!
திருவாரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் நியாய விலை கடை பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “தமிழக அரசு தற்போது டாஸ்மாக் மது பார்களை திறக்க உத்தரவிட்ட நிலையில் பார் உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் நிர்ப்பந்தப்படுத்தி வாங்கும் நிலை உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பார் கடையில் கடையின் உரிமையாளர் கூறியபடி நடக்கவேண்டும் இல்லை என்றால் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்து விடுவோம் துன்புறுத்தி வருகின்றனர்.
இதேபோல திருவண்ணாமலையில் ரேஷன் கடையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியரிடம் தகராறு செய்து பொங்கல் பரிசுத் தொகையை நாங்கள் தான் கொடுப்போம் என்று ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது மாதிரி மாநிலம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் டாஸ்மாக் அதிகாரிகளும் பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் வரும் ஜனவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!