Tamilnadu
நாகையில் அதிமுகவினருடன் கூட்டுசேர்ந்து குடைச்சல் கொடுத்த பாஜக பிரமுகர்; ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முறச்சி
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாமராமபுரத்தை சேர்ந்தவர் தமிழ்மணி. வேளாங்கண்ணியில் தாராபவன் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வருகிறார்.
தமிழ்மணி உணவக விடுதியை விரிவாக்கம் செய்வதற்கான கட்டட பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அருகில் உணவகம் நடத்தி வரும் பாஜக பிரமுகர் பாஸ்கர் அதிமுகவினர் உதவியுடன் கட்டுமான பணிகளை தொடர்ந்து தடுத்து வருகிறார்.
தமிழ்மணியின் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளரை உணவு அருந்தவிடாமலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிமுகவினருக்கும் பாஜகவுக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தமிழ்மணி நேற்று பூச்சிமருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சி ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்ட கடை ஊழியர்கள் அவரை வேளாங்கண்ணி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வரும் தமிழ்மணியை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வேளாங்கண்ணியில் பாஜக பிரமுகரின் தொடர் தொந்தரவால் உணவக விடுதி உரிமையாளர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!