Tamilnadu
திருவள்ளூரில் மீண்டும் சாதி கொடுமை:பட்டியலின கவுன்சிலரை பணி செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க துணை தலைவர்!
திருவள்ளூர் மாவட்டதில் மீண்டும் ஒரு சாதி பாகுபாட்டு சர்ச்சை எழுந்துள்ளது.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் தலைவர் தங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் உள்பட மொத்தம் 15 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
ஒன்றியத்தில் மொத்தம் 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இதில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கப்பட்டன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்காத காரணத்தால் தீர்மானங்கள் வாசிப்பு மட்டுமே செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் போனது. இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் தங்க தனம் செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் தன்னை ஒரு ஒன்றிய குழு தலைவராக செயல்பட விடாமல் சிலர் தடுக்கின்றனர். மேலும் அதிகாரிகளும் என்னை கண்டுகொள்வதில்லை.
கடந்த 2 மாதங்களாக தான் மக்கள் நலப்பணியில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தன்னை எங்கள் கட்சியை சேர்ந்த ஒன்றிய அதிமுக செயலாளரும் துணைத் தலைவருமான இன்.என்.கண்டிகை ரவி தூண்டுதலின் பேரில் மற்ற கவுன்சிலர்கள் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். அதிமுக இரண்டு கோஷ்டிகளாக இருப்பதால் திருத்தணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்து உள்ளன.
Also Read
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!
-
"28 சதவீத உச்சபட்ச GST வரிவிதிப்பு தேவையா?"- ஒன்றிய பாஜக அரசுக்கு பஜாஜ் நிர்வாக இயக்குனர் கண்டனம் !