Tamilnadu
திருவள்ளூரில் மீண்டும் சாதி கொடுமை:பட்டியலின கவுன்சிலரை பணி செய்யவிடாமல் தடுக்கும் அ.தி.மு.க துணை தலைவர்!
திருவள்ளூர் மாவட்டதில் மீண்டும் ஒரு சாதி பாகுபாட்டு சர்ச்சை எழுந்துள்ளது.
திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் தலைவர் தங்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் உள்பட மொத்தம் 15 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
ஒன்றியத்தில் மொத்தம் 12 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இதில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் மட்டுமே வாசிக்கப்பட்டன. ஆனால் மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் பங்கேற்காத காரணத்தால் தீர்மானங்கள் வாசிப்பு மட்டுமே செய்யப்பட்டு நிறைவேற்றப்படாமல் போனது. இதனால் திருத்தணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றியக்குழு தலைவர் தங்க தனம் செய்தியாளர்களிடம் கூறும்போது, தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர் என்பதால் தன்னை ஒரு ஒன்றிய குழு தலைவராக செயல்பட விடாமல் சிலர் தடுக்கின்றனர். மேலும் அதிகாரிகளும் என்னை கண்டுகொள்வதில்லை.
கடந்த 2 மாதங்களாக தான் மக்கள் நலப்பணியில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் தன்னை எங்கள் கட்சியை சேர்ந்த ஒன்றிய அதிமுக செயலாளரும் துணைத் தலைவருமான இன்.என்.கண்டிகை ரவி தூண்டுதலின் பேரில் மற்ற கவுன்சிலர்கள் கலந்து கொள்ள விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார். அதிமுக இரண்டு கோஷ்டிகளாக இருப்பதால் திருத்தணி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்து உள்ளன.
Also Read
-
பா.ஜ.க.வின் பெயரைப் பயன்படுத்த த.வெ.க அச்சப்படுவது ஏன்? - தொடரும் கள்ள மெளனம்!
-
மாணவர்களுக்கு இருக்கும் துணிச்சல்கூட இந்த 'டம்மி' முதல்வருக்கு இல்லை என்பது வெட்கக்கேடு : திமுக ஐடி விங்!
-
தூத்துக்குடி முத்துக்களுக்கான புவிசார் குறியீடு எப்போது? : கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்!
-
டெல்லியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாணவர் அமைப்பினர் கைது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!
-
நீட் தேர்வின் ஆபத்தை முதன்முதலில் எச்சரித்தது தி.மு.க.தான் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!