Tamilnadu
“அடிக்கடி சூட்கேசில் என் மூலம் பணம் கைமாறும்” : அ.தி.மு.க எம்.எல்.ஏ மீது அவரது உதவியாளர் பரபரப்பு புகார்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் உசிலம்பட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ. பா.நீதிபதியிடம் எலெக்ட்ரிசியன் ஆக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று எம்.எல்.ஏ விட்டிற்கு சென்ற எனது மகன் முருகன் மற்றும் அவரது மனைவி சுமதி இருவரும் வீடு திரும்பவில்லை என்றும் அங்கு அவர்களை அடித்து துன்புறுத்துவதாக முருகனின் தந்தை ராமர் என்பவர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
புகாரினை பெற்றுக்கொண்ட போலிசார் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய சிறிது நேரத்திலேயே, காணமல் போனதாக கூறப்பட்ட முருகன் சுமதி என்ற இருவரும் காவல் நிலையம் வந்தனர்.
அப்போது முருகன் காவல்துறை அதிகாரியிடம் அளித்த புகாரில், “நான் எம்.எல்.ஏ.வின் உதவியாளராக உள்ளேன். எலெக்ட்ரிக் வேலைகளை செய்து வருகிறேன். அடிக்கடி எம்.எல்.ஏ-வுக்கு சூட்கேசில் பணம் என் மூலம் கைமாறும்.
அந்தவகையில், நேற்றைய தினம் 2 கோடி மதிப்பிலான ஒரு பெட்டியை மர்ம நபர் கொடுத்து எம்.எல்.ஏ பா.நீதிபதியிடம் கொடுக்க சொன்னார். நானும் அந்த பெட்டியை எம்.எல்.ஏ-விடம் கொடுத்த போது அதிலிருந்து சுமார் 44 லட்சம் குறைந்தாக கூறி, என்னையும், என் மனைவி சுமதியையும் எம்.எல்.ஏ வீட்டிற்கு வரவழைத்து அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் உடலில் காயங்கள் இருந்தால் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ள முருகன் சுமதி தம்பதிகள் குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ பா.நீதிபதி மீது அவரது உதவியாளர் கண்ணீருடன் பேட்டியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!