Tamilnadu

மலிவான விலையில் உணவு - மருந்துகள் வழங்கி சேவை செய்த சமூக சேவகர் ‘சாந்தி கியர்ஸ் சுப்ரமணியம்’ காலமானார்!

கோவை சாந்தி சோசியல் நிர்வாக இயக்குனர் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) காலமானார். 1972ல் ஒரு லேத் பட்டறை வைத்து தொழில் துவங்கிய இவர், ஜவுளி உதிரி பாகங்கள் தயாரித்தவர், இஸ்ரோவிற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார். இவருடைய சாந்தி கியர்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்தவர்.

பின்பு 1996ல் சாந்தி சோஸியல் சர்வீசை உருவாக்கினார். இதன் மூலம் மருத்துவமனை, மருந்தகம், உணவகம், பெட்ரோல் பங்குகள் மூலம் சேவையாற்றிவர், தினமும் 300 வயதானவர்களுக்கு இலவச உணவும், மற்ற அனைவருக்கும் 30 ரூபாய்க்கு தரமான உணவுகள், சிற்றுண்டிகள் வழங்கினர்/

அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 30 சதவீதம் தள்ளுபடியுடன் மருந்துகள், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, பெட்ரோல் விற்பனையிலும் அதன் ஸ்டாக் விலையிலேயே விற்பனை செய்தார். எனவே, இவரது நிறுவனங்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பாராட்டப்பட்டவர். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள கூடாது என ஊடகங்களில் கடைசி வரை முகத்தை காட்டுவதில்லை என உறுதியாக இருந்த அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரின் மறைவு கோவை மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க மிகப்பெரிய அளவில் ராணுவத்தை குவிக்க மோடி அரசு திட்டம்? : அதிர்ச்சி தகவல்!