Tamilnadu
சர்வதேச மனித உரிமை நாள் : “மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 15 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று உலக மனித உரிமை தினம் அனுசரிக்கப்பட்டுகிறது. 1948-ம் ஆண்டில் உலக நாடுகள் ஒன்றிணைந்து கொண்டுவரப்பட்ட மனித உரிமை பிரகடனத்தை ஐ.நா ஏற்றுக்கொண்ட இந்த நாளில், விவசாயிகளின் உரிமைக்கான போராட்டம் தலைநகரில் நடைபெறுகிறது.
2020-ம் ஆண்டின் மனித உரிமை தின கருப்பொருளாக ‘சிறப்பாக மீண்டெழுவோம், மனித உரிமைகளுக்காகத் துணை நிற்போம்’ என்பதை ஐ.நா சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மனித உரிமையைப் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “இந்தியா முழுவதும் விவசாயப் பெருங்குடி மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். கொரோனா காலம் என்பதால் அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கிறார்கள்!
மக்கள் உரிமைகள் முதல் மாநில உரிமைகள் வரை பட்டப்பகலில் பறிபோய்க்கொண்டு இருக்கிறது. மனித உரிமை நாளை உண்மையில் கொண்டாடும் தகுதியை நாம் எப்போது பெறப் போகிறோம்! மனித உரிமையை மனிதர் பெறும் வரை உரிமைப் போர் தொடரட்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!