Tamilnadu
“அதிமுக அரசை அகற்றுவதே மக்களின் முடிவு.. திமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது” - தயாநிதி மாறன்
சென்னை யானைகவுனி பகுதியில் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி , ரயில்வே பொது மேலாளரை இன்று நேரில் சந்தித்து தயாநிதி மாறன் எம்.பி மனு அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், யானைகவுனி ரயில்வே மேம்பால பணியை தொடங்கி பின் , இதுவரை ஆமை வேகத்தில் பணிகள் நடந்து முழுமையான பணிகள் முடிவடையாததால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிப்பதாகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுமையாக முடிவடைய உள்ள பணியை ஜூன் மாதத்திற்குள் விரைந்து முடிக்க வலியுறுத்தியாகவும் கூறினார்.
கொளத்தூர் ராஜாஜி நகரில் ரயில்வே இடத்தில் குப்பைகள் தேங்கி இருப்பதாகவும் அதனால் தண்ணீர் தேங்கி , நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் , குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாக தயாநிதி மாறன் கூறினார்.
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு சார்பில் தாம்பரம் நடைபாதை பணிகளை விரைந்து முடிக்கவும் அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் மக்களின் சிரமத்தைப் போக்க புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் எனவும் தயாநிதிமாறன் பொது மேலாளரிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகள் உரிமை பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் உரிமையை மீட்க தி.மு.க சார்பில் 5ம் தேதி போரட்டத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், தி.மு.கவினரும் பல இடங்களில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியதாகவும், மக்கள் அ.தி.மு.க அரசை அகற்ற முடிவு எடுத்துவிட்டார்கள், யார் வந்தாலும் திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது எனவும் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
Also Read
-
“திமுக என்றுமே ஒரு ஆக்க சக்தியாகவே திகழும்”: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் : பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் த.வெ.க-வினர்!
-
”இயற்கையின் ரகசியம்.. நீலகிரியில் அரிய வகை பறக்காத ஈ கண்டுபிடிப்பு.. ஆச்சரியத்தில் ஆழ்ந்த மக்கள்!”
-
அடுத்தடுத்து வெளிவரும் த.வெ.க நிர்வாகிகளின் மோசடி : ரூ.15 கோடி ஏமாற்றம்!
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!