Tamilnadu
கல்லூரியில் சேர வசதியின்றி கூலி வேலைக்குச் சென்ற மாணவி: முழு கல்வி செலவையும் ஏற்று உதவும் திமுக நிர்வாகி!
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. பெற்றோரை இழந்த தேன்மொழியை 12-ம் வகுப்பு வரை உறவினர்கள் படிக்க வைத்துள்ளனர்.
உறவினர்களின் குடும்பச் சூழல் காரணமாக அடுத்தடுத்த மேற்படிப்பு படிக்க வைக்க பணம் இல்லை என்றதும், தேன்மொழி 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
மாணவி தேன்மொழியின் நிலையை அறிந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜா கடந்த ஆண்டு கல்லூரி படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார்.
இந்நிலையில் மாணவி தேன்மொழிக்கு இரண்டாம் ஆண்டு படிப்புக்கு தேவையான பணத்தை இன்று வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட மாணவி தேன்மொழி, “வாழ்க்கையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவர் வை.முத்துராஜா அவர்கள் எனக்கு கல்லூரியில் படிக்க அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்களுக்கும் வாழ்க்கையில் என்றென்றும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உதவியை வழங்கிய தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் மருத்துவர் வை.முத்துராஜாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மாணவி தேன்மொழியின் மூன்று ஆண்டு படிப்பு செலவையும் ஏற்று படிப்பு முடிந்த உடன் அவரது மருத்துவமனையில் வேலையும் தருவதாக மருத்துவர் முத்துராஜா உறுதியளித்துள்ளார்.
Also Read
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!
-
“பழனிசாமியிடம் உண்மையும் கிடையாது, உழைப்பும் கிடையாது, வெறும் பிழைப்புதான் உண்டு!” : முரசொலி தலையங்கம்!
-
திமுக கூட்டணியில் மேலும் 3 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு... என்னென்ன கட்சிகள்? எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
“பாஜக ஒரு பாறாங்கள்.. அதை கட்டிக்கொண்டு தண்ணீரில் விழுந்தால்...” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
-
“டில்லி சரணம் பாடி பழனிசாமி.. அதிகார பங்கிற்கு ஒரு கட்சியும் ஏறிட்டு பார்க்கவில்லை..” - கி.வீரமணி தாக்கு!