Tamilnadu
தமிழகத்தில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் பதிவாகும் கொரோனா பலி எண்ணிக்கை... புதிதாக 1,428 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் புதிதாக 68 ஆயிரத்து 388 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,428 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதில், சென்னையில் 397, கோவையில் 142, சேலத்தில் 99, செங்கல்பட்டில் 83, திருவள்ளூரில் 65, காஞ்சியில் 61, திருப்பூரில் 55 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக உயிரிழப்போரின் எண்ணிக்கை மீண்டும் இரட்டை இலக்கில் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் மேலும் 11 பேர் பலியானதை தொடர்ந்து மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல புதிதாக 1,398 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்கள். அதனையடுத்து இதுவரையில் கொரோனா பாதிப்பில் இருந்து 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 பேர் மீண்டிருக்கிறார்கள். தற்போது 10 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!