Tamilnadu
தமிழகத்தில் மீண்டும் இரட்டை இலக்கத்தில் பதிவாகும் கொரோனா பலி எண்ணிக்கை... புதிதாக 1,428 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் புதிதாக 68 ஆயிரத்து 388 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 1,428 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அதில், சென்னையில் 397, கோவையில் 142, சேலத்தில் 99, செங்கல்பட்டில் 83, திருவள்ளூரில் 65, காஞ்சியில் 61, திருப்பூரில் 55 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக உயிரிழப்போரின் எண்ணிக்கை மீண்டும் இரட்டை இலக்கில் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் அரசு மருத்துவமனையிலும் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் மேலும் 11 பேர் பலியானதை தொடர்ந்து மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல புதிதாக 1,398 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்கள். அதனையடுத்து இதுவரையில் கொரோனா பாதிப்பில் இருந்து 7 லட்சத்து 62 ஆயிரத்து 15 பேர் மீண்டிருக்கிறார்கள். தற்போது 10 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Also Read
-
சொந்த கட்சி பெண்ணுக்கு.. 6 மாதமாக நடவடிக்கை எடுக்காத மேலிடம் -தவெக வேட்பாளர் மீது பாய்ந்த பாலியல் வழக்கு!
-
”சூப்பர் ஸ்டாராக தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை.. விழி பிதுங்கி நிற்கும் பழனிசாமி” : முரசொலி தலையங்கம்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPIM-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!