Tamilnadu

“வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு; தென்தமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும்” : வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், இது மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதனைத் தொடர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது புயலாக மாறி, இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகை இரண்டாம் தேதி மாலை இலங்கை கடற் பகுதியில் கரையை கடக்கும் எனவும் பின்னர் மேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் தெற்கு கேரள பகுதிகளில் வரும் 2-ம் தேதி ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஓரு சில இடங்களில் அதித கனமழைக்கும் வாய்ப்புள்ளது, அதே சமயம் இந்த பகுதிகளில் 1, 3, மற்றும் 4 தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று இரவு முதல் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை : அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை!