Tamilnadu
புதிதாக 2,115 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. ஒரே நாளில் 25 பேர் பலி.. தமிழகத்தில் தணியாத கொரோனா! #CovidUpdates
தமிழகத்தில் புதிதாக 76 ஆயிரத்து 574 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 2,112 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் மட்டுமே 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, கோவையில் 190, செங்கல்பட்டில் 148, திருவள்ளூரில் 120, காஞ்சியில் 97, திருப்பூரில் 81 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் மேலும் 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை 11 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். தற்போது 18 ஆயிரத்து 395 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!