Tamilnadu
புதிதாக 2,115 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. ஒரே நாளில் 25 பேர் பலி.. தமிழகத்தில் தணியாத கொரோனா! #CovidUpdates
தமிழகத்தில் புதிதாக 76 ஆயிரத்து 574 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 2,112 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் மட்டுமே 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, கோவையில் 190, செங்கல்பட்டில் 148, திருவள்ளூரில் 120, காஞ்சியில் 97, திருப்பூரில் 81 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் மேலும் 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை 11 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். தற்போது 18 ஆயிரத்து 395 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
”ஓய்வின்றி உழைப்போம்.. திராவிட மாடல் 2.O ஆட்சி அமைப்போம்” : 75,000 BLA2-க்களுடன் முதலமைச்சர் பேச்சு!
-
எதிர்க்கட்சியினரை முடக்க சதி : செல்வப்பெருந்தகை இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை - முதலமைச்சர் கண்டனம்!
-
“ஆர்வக்கோளாறில் அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்” : நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு!
-
தொகுதிமறுவரையறை - டெல்லியைத் தோற்கடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : முரசொலி!
-
“தமிழ்நாடு முழுவதும் சென்றுவிட்டு, சென்னை மக்களை சந்திக்க வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் பிரச்சார உரை!