Tamilnadu
புதிதாக 2,115 பேருக்கு வைரஸ் பாதிப்பு.. ஒரே நாளில் 25 பேர் பலி.. தமிழகத்தில் தணியாத கொரோனா! #CovidUpdates
தமிழகத்தில் புதிதாக 76 ஆயிரத்து 574 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 2,112 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதில், சென்னையில் மட்டுமே 565 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக, கோவையில் 190, செங்கல்பட்டில் 148, திருவள்ளூரில் 120, காஞ்சியில் 97, திருப்பூரில் 81 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,347 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததை அடுத்து ஒட்டுமொத்தமாக இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 686 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும் மேலும் 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து இதுவரை 11 ஆயிரத்து 440 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். தற்போது 18 ஆயிரத்து 395 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !