Tamilnadu
“முதியோர் உதவித்தொகைக்கு கூட லஞ்சம்”: லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகேயுள்ள எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் பெரியாப்பிள்ளை என்பவர் பொதுமக்களிடம் லஞ்சம் வங்கிக்கொண்டு மட்டுமே பணியை செய்வதாக கூறப்பட்டுகிறது.
இதனையடுத்து பொதுமக்களிடம், முதியோர், விதவை உதவித்தொகை பெற்றுத்தர வாங்கிய லஞ்சப்பணத்தை திரும்ப வழங்கக்கோரியும், வீட்டுமனைபட்டா வழங்குவதாக கூறி பெற்ற லஞ்சப் பணத்தை திரும்ப வழங்கக்கோரியும் அவரை பணிநீக்கம் செய்யக்கோரியும் மக்கள் உரிமை, லஞ்ச ஒழிப்பு மற்றும் நுகர்வோர் பேரவையின் மாநிலத்தலைவர் இராமநாத அடிகளார் தலைமையில் எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற லஞ்சம் எடுத்து லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?