Tamilnadu
மிகமிக அதிகமான தண்டனையை அனுபவித்துவிட்டார்கள் -எழுவர் விடுதலை குறித்து ஜனாதிபதிக்கு சு.வெங்கடேசன் கடிதம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் தங்களது வாழ்க்கையை கழித்து வரும் எழுவரின் துயர் பற்றி எடுத்துரைக்கவும் அவர்களது விடுதலைக்கு ஏற்பாடு செய்யவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இந்திய சட்ட அமைப்பின்படி வாழ்நாள் சிறை என்பதன் காலம் வரையறுக்கப்படவில்லை என்றாலும் பொதுவாக 14 வருடங்கள் என்பது ஒரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்படிப் பார்த்தால் இந்த எழுவரும் இரண்டு வாழ்நாள் தண்டனைகளுக்கும் மேலாகவே அனுபவித்தும் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்வேறு அமைப்புகள் இந்த எழுவரின் விடுதலையை தொடர்ந்து கோரி வருகின்றன.
ஆகவே மக்கள் மத்தியிலும் இவர்களின் விடுதலைக்கான விரிந்த ஏற்பு உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் இந்த பிரச்சினையில் ஆளுநர் இவ்விவகாரத்தில் முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டதையும் இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இந்த பிரச்சினையில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக முடிவெடுத்து எழுவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அந்த எழுவரும் மிக மிக அதிகமான தண்டனையை ஏற்கனவே அனுபவித்து விட்டார்கள் என்கிற அடிப்படையில் இந்த விடுதலையை வழங்க வேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?