Tamilnadu
மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களின் சிலையை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு!
சென்னை மாதவரம் கொசப்பூரில் உள்ள தனது நிலத்தில் நிறுவப்ப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறக்க அனுமதிக்கக்கோரி தி.மு.க பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம்.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனி நபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலைகளை வைத்துகொள்ள அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற பிறப்பித்த தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தாக்கல் செய்யப்பட்டது.
தனி நபரின் பட்டா நிலத்தில் சிலை வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தாலும், மாநில அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை வைக்க கூடாது என ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கபப்ட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தமிழக அரசின் அரசாணை மற்றும் சிலை திறக்க அனுமதிப்பது தொடர்பாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!