Tamilnadu
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய தலைவர்கள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதேப்போல், தெப்பக்குளம் பகுதியில், முத்தமிழறிஞர் கலைஞரால் நிறுவப்பட்ட மருது சகோதரர்கள் சிலைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தி.மு.க சார்பில் தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சிக்கு வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனூர் மற்றும் பசும்பொன்னில் மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் முத்துராமலிங்கம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மாநகர் பொறுப்பாளர் கோ தளபதி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் வ.பி.மூர்த்தி எம்எ.ல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் மேயர் குழந்தைவேலு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!