Tamilnadu
“தி.மு.க-விற்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் பிரச்சாரம்” : காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் பேட்டி!
தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் சந்தித்த நிலையில், காடுவெட்டி குருவின் மகனும், மாவீரன் மஞ்சள் படையின் தலைவருமான கனலரசன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கனலரசன் அளித்த பேட்டியில், “தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கோரிக்கை விடுத்தோம். கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தலைமையுடன் பேசி நல்ல முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் மாவீரன் மஞ்சள் படை தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யும். தி.மு.க ஆட்சிகாலத்தில் தலைவர் கலைஞர் 108 சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அதே போன்று தற்போது வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டை தி.மு.க பெற்றுத் தரும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!