Tamilnadu
அரியலூர் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 43 வயதான கூலித் தொழிலாளி பிச்சை பிள்ளை. இவர் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த 12 வயது சிறுமி சத்தம் போடவே, அங்குள்ள பொதுமக்கள் மாடிக்குச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இதனையடுத்து 43 வயது கூலித்தொழிலாளி பிச்சை பிள்ளையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபருக்கு திருமணமாகி 3 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!