Tamilnadu
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை : சென்னையில் கொட்டும் மழையால் பல்வேறு சாலைகளில் வெள்ளப்பெருக்கு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதில் குறிப்பாகச் சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் ஒரு மணி நேரமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.
அண்ணா சாலையில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் :
கடந்த ஒரு மணி நேரமாகப் பெய்த கனமழையின் காரணமாகச் சென்னையில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாகச் சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றான அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் அண்ணா சாலையில், மழைநீர் தேங்கி நிற்பதால் கூடுதல் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாகச் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் பெருமளவில் மழைநீரானது சாலைகளில் தேங்கி வாகனங்களை மூழ்கடிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சில இடங்களில் வாகனங்கள் பழுதாகி நிற்கக்கூடிய காட்சிகளும் காணப்படுகிறது.
மேலும் மழை நீர் சாலையில் தேங்கி இருப்பதன் காரணத்தினாலும் சில முக்கிய சாலைகளில் சாலை விளக்குகள் சரிவர இயங்காததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
Also Read
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
-
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!
-
கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா? : தி.மு.க கேள்வி!