Tamilnadu
நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு!
பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றுதல், கூட்டம் கூடுவது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மக்கள் முககவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழக்கமான, நடைமுறையே தொடரும் என்றும், மற்ற இடங்களில் திரையரங்குகள் தவிர மற்ற வணிக வளாகங்களை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது கடைகள் இரவு 9 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விழாக்காலத்தை கருத்தில் கொண்டு கடைகளுக்கு கூடுதல் நேரம் அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.
Also Read
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?
-
"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !