Tamilnadu
நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு!
பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றுதல், கூட்டம் கூடுவது ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும், மக்கள் முககவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வழக்கமான, நடைமுறையே தொடரும் என்றும், மற்ற இடங்களில் திரையரங்குகள் தவிர மற்ற வணிக வளாகங்களை திறக்கவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தற்போது கடைகள் இரவு 9 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விழாக்காலத்தை கருத்தில் கொண்டு கடைகளுக்கு கூடுதல் நேரம் அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!