Tamilnadu
தங்கத்தை போல் கிடுகிடுவென ஏறும் வெங்காய விலை... விலைவாசியை கட்டுப்படுத்தாதது ஏன்? அரசுக்கு மக்கள் கேள்வி!
சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 450க்கும் மேலான வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.
தற்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்துவருவதால், காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.
ஆந்திராவில் இருந்து தினந்தோறும் 150 வாகனங்களில் கொண்டு வரப்பட்ட வெங்காயங்கள் தற்போது 50 வாகனங்களில் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக வெங்கயாத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 முதல் 110 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சாம்பார் வெங்காயம் ரூ.100க்கும், பீன்ஸ், முருங்கைக்காய் 80ரூபாய்க்கும், பீட்ரூட் உள்ளிட்ட பிற காய்கறிகள் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அப்படியெனில் அங்கிருந்து வாங்கி நகரங்களில் விற்பனை செய்யும் போது வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் அதிகமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
தங்கத்தின் விலை கூட குறைந்திருக்கும் போது வெங்காயத்தின் விலை அதிகரிப்பது அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Also Read
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது! அது அனைவருக்கும் தெரியும்!”: முதலமைச்சர் திட்டவட்டம்!
-
“ஆளத் தெரியாமல், இந்தியாவை அடகு வைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டைக் காப்போம்!” : கி.வீரமணி அறிக்கை!
-
இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘பேட்’ குறித்து சர்ச்சை கிளப்பிய இலங்கை வீரர்! : முழு விவரம் உள்ளே!