Tamilnadu
2 பெண் குழந்தைகளுக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை : நாமக்கல் அருகே 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ளது அணைப்பாளையம் கிராமம். அங்கு வசித்துவரும் 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில், உள்ள சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலிஸார் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து 75 முதியவர் உட்பட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவா, சண்முகம், முத்துசாமி, மணிகண்டன், சூர்யா, வரதராஜ் ஆகிய 7 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் AI, VFX மையம்; 1000 மினி பேருந்துகள்! : சென்னைக்கு சிறப்பு தேர்தல் வாக்குறுதி வெளியிட்ட திமுக!
-
“ஆட்டோ மாணிக்கத்தை, ‘பாட்ஷா’வாக மாற வைத்துவிட்டது பா.ஜ.க!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே, அட அப்புறமா குட்டுப்பட்டு ஓடாதே!” : திருப்பூரில் முதலமைச்சர் பிரச்சார உரை!
-
Delimitation: புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
“பா.ஜ.க-வுக்கு எப்போதும் தமிழ்நாடு அடிபணியாது” : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி எம்.பி பேச்சு!