Tamilnadu
2 பெண் குழந்தைகளுக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை : நாமக்கல் அருகே 75 வயது முதியவர் உட்பட 7 பேர் கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்து உள்ளது அணைப்பாளையம் கிராமம். அங்கு வசித்துவரும் 12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும், கடந்த 6 மாத காலமாக அப்பகுதியில், உள்ள சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியாவிற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவர் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அதன் பேரில், போலிஸார் இன்று அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து 75 முதியவர் உட்பட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவா, சண்முகம், முத்துசாமி, மணிகண்டன், சூர்யா, வரதராஜ் ஆகிய 7 பேரையும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!