Tamilnadu
மாணவர்கள் நலனில் கண்ணாமூச்சி ஆடும் எடப்பாடி அரசு - பள்ளிகள் திறப்பு குறித்த அரசாணை நிறுத்திவைப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது பள்ளிகளைத் திறப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக வந்த அறிவிப்பு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பொதுவாக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் எடப்பாடியும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையைனும், பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால் திடீரென இந்த அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், அக்.,1ம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்குச் செல்லலாம் என பொறுப்பின்றி அறிவித்த எடப்பாடி பழனிசாமி அரசின் இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே எந்த ஒரு தளர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படவேண்டும். ஆனால் பள்ளிகள் திறப்பு விசயத்தில் எந்த ஒரு ஆலோசனையுமின்றி வெளியான இந்த அறிவிப்பு மாணவர்களின் மீதுள்ள எடப்பாடி அரசின் பொறுப்பின்மையைத் தமிழக மக்களுக்குக் காட்டியது.
இந்த நிலையில், அக்டோபர் 1 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்குப் போகலாம் என்று அறிவித்த அரசாணையை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!