Tamilnadu
வேளாண் மசோதா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு!
நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா மூலம் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்குமா? பெரிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் இருக்குமா? என செய்தியாளர்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றிருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் மசோதா குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேளாண் துறை அமைச்சர், "தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சட்டம். விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஆதரவு தெரிவித்தார் . தமிழக அரசு இதுகுறித்து சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள். பத்திரிகை துறை சார்ந்தவர்கள் சொன்னால் மட்டுமே நம்புவார்கள்" என அமைச்சர் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவிற்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் தான் அளித்தார் என்று மழுப்பலான பதிலை மட்டுமே அமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதா மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கலுக்கு வழிவகை செய்யும் என்ற கேள்விக்கு அமைச்சர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய வேளாண் சட்டம் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் கூறினார்.
ஏற்கனவே மாநில அரசு செயல்படுத்தி வருவதாக இருந்தால் பின் ஏன் மத்திய அரசு மசோதாவை கடைபிடிக்க வேண்டும், இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலுக்கு தமிழக அரசு துணை போவதாக இல்லையா என்ற கேள்விக்கு வேளாண் துறை அமைச்சரும் செயலாளரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றிருக்கிறார்கள்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !