Tamilnadu
வேளாண் மசோதா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு!
நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா மூலம் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்குமா? பெரிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் இருக்குமா? என செய்தியாளர்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றிருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.
சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் மசோதா குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேளாண் துறை அமைச்சர், "தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சட்டம். விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஆதரவு தெரிவித்தார் . தமிழக அரசு இதுகுறித்து சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள். பத்திரிகை துறை சார்ந்தவர்கள் சொன்னால் மட்டுமே நம்புவார்கள்" என அமைச்சர் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவிற்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் தான் அளித்தார் என்று மழுப்பலான பதிலை மட்டுமே அமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதா மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கலுக்கு வழிவகை செய்யும் என்ற கேள்விக்கு அமைச்சர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய வேளாண் சட்டம் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் கூறினார்.
ஏற்கனவே மாநில அரசு செயல்படுத்தி வருவதாக இருந்தால் பின் ஏன் மத்திய அரசு மசோதாவை கடைபிடிக்க வேண்டும், இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலுக்கு தமிழக அரசு துணை போவதாக இல்லையா என்ற கேள்விக்கு வேளாண் துறை அமைச்சரும் செயலாளரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றிருக்கிறார்கள்.
Also Read
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!