Tamilnadu
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு : காவல்துறையை சேர்ந்தவர்களே முறைகேடுகளுக்கு காரணம் என புகார்!
கடந்த ஜனவரி மாதம் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் முறைகேடு நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்வர்கள், “ஜனவரி மாதம் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன.
இதனால், தேர்வு பணிக்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களே செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பல இடங்களில் அவர்களே முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். மேலும் வேலூர் உள்ளிட்ட சில இடங்களில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் விவரங்கள் சமூக வலைதளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வெளியானது எப்படி” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருப்பதாகவும், இதற்கிடையே அவசரம் அவசரமாக பணி நியமன பணிகள் நடந்து வருகின்றன என்றும் குற்றம்சாட்டிய அவர்கள், முறைகேடு தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!