Tamilnadu

“மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை பெயரை சூட்ட வேண்டும்” : ஐகோர்ட்டில் வழக்கு!

தமிழகத்தின் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு காரணமான மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி 3 முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு முன்னாள் முதல்வர்களின் பெயர்களை சூட்டினார்.

அதன்படி, ஆலந்தூர் நிலையத்திற்கு "அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ" எனவும், சென்ட்ரல் ரயில் நிரையத்திற்கு "எம்.ஜி.ஆர் மெட்ரோ ரயில் நிலையம்" எனவும், கோயம்பேடு நிலையத்திற்கு "ஜெயலலிதா மெட்ரோ" ரயில் நிலையம் என்றும் மாற்றப்பட்டது.

சென்னையின் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த மத்திய அரசிடம் அனுமதியுடன் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் திட்டத்திற்கு காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதியின் முயற்சியை வரலாற்றில் இருந்து மறைக்கவும், அரசியல் நோக்கத்துடனும் மற்ற தலைவர்களின் பெயர்கள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதனால் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ நிலையத்திற்கு "டாக். கலைஞர் கருணாநிதி டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம்" என்ற பெயரை வைக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தாமதமாக கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் - ரூ.143 கோடி வசூலிக்க மெட்ரோ நிர்வாகத்துக்கு ஐகோர்ட் அனுமதி!