Tamilnadu
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
மேலும் அரியர் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியது. இதனால் அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், இறுதி செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடைபெறும்.
கணினி அல்லது ஸ்மார்ட் போனில் கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்கவேண்டும். விடையைத் தேர்வு செய்யும் வகையில் (Multiple Choice Questions) தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!