Tamilnadu
பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: செப். 22 முதல் நடைபெறும் - அண்ணா பல்கலை. அறிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
மேலும் அரியர் மாணவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியது. இதனால் அரியர் தேர்வு ரத்து விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி செமஸ்டர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், இறுதி செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படும். தேர்வு நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், ஆன்லைனில் மாதிரி தேர்வு நடைபெறும்.
கணினி அல்லது ஸ்மார்ட் போனில் கேமரா, மைக்ரோபோன் வசதியுடன் இணையதள வசதி இருக்கவேண்டும். விடையைத் தேர்வு செய்யும் வகையில் (Multiple Choice Questions) தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் - தமிழக வேட்பாளருக்கு திமுகவின் ஆதரவைக்கேட்பது நகைப்புக்குரியது: முரசொலி!
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?