Tamilnadu
சாலை விபத்துகளில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் தமிழகம் - மோசமான சாலைகளே முக்கிய காரணம்?!
தமிழ்நாடு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகச் சாலை விபத்தில் முதலிடம் பிடித்து வருகிறது. 2019ம் ஆண்டில் மட்டும் 57,228 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்தில் 51,641 சாலை விபத்து பதிவுடன் உள்ளது. மூன்றாம் இடத்தில் கர்நாடகா 40,644 எனும் எண்ணிக்கையில் உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 63,920 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.
NCBR அறிக்கைப்படி தமிழகத்தில் 57,228 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன, இவற்றின் மூலம் 10,525 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இதேபோல், மத்திய பிரதேசத்தில் 51,641 விபத்துகளில் 11,856 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், கர்நாடகாவிலும் 40,644 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன; அவற்றின் மூலம் 10,951 பேர் இறந்துள்ளனர்.
பெரும்பாலான விபத்துகளுக்கு சாலை விதிகளை மீறுவதும், இருசக்கர வாகனத்தில் செல்வோர் மொபைலில் பேசிக்கொண்டு செல்வதும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் செல்வதும், குடி போதையில் வாகனங்கள் ஓட்டுவதும் முக்கிய பங்காக உள்ளது.
இவை தவிர்த்து மோசமான சாலைகளாலும், இரவு நேரத்தில் விளக்குகள் சரிவர எரியாததாலும்,நெடுஞ்சாலைகளில் உள்ள அபாய பகுதிகளை கண்டறிந்து சரி செய்யாமல் இருப்பதாலும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நிகழ்வதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!